ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.
ஜி - 20 அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் மாநாடு புதுடில்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று முன்தினம் புதுடில்லி வந்து சேர்ந்தார். அவர் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை நேற்று சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகள் குறித்து பேசப்பட்டன. உக்ரைன் போர் விவகாரம் குறித்தே அதிகம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து, ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் ஜி - 20 தலைமை பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிப்போம். சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வு காண, ஜி - 20 மாநாடு உதவும் என்று நம்புகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.