ஜூலை 1-ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெறும் குவாட் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். மாநாட்டில் இந்தோ-பசிபிக் பாதுகாப்பு முக்கிய விவாதமாக இருக்கிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஜூலை 1-ஆம் தேதி குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை மந்திரிகள் மாநாடு நடைபெறும் என அறிவித்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்த மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியின் நிலைமை மற்றும் பாதுகாப்பு குறித்து முக்கிய விவாதங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஜூன் 30 முதல் ஜூலை 2 வரை அமெரிக்கா பயணிக்க உள்ளார். இந்த மாநாடு, குவாட் நாடுகளின் ஒத்துழைப்பையும், பிராந்திய நலன்களை பேணும் முயற்சியையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.