2023-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2023க்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக கால்நடை பராமரிப்புதுறை தெரிவித்துள்ளது, தமிழ்நாட்டின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வகையில் அரசு நல்லபடியாக நடத்த பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றது.
இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதை காண்பதற்காக வெளிநாடுகளில் இருந்து மக்கள் வரக்கூடியது நம்மால் பார்க்க முடிகிறது. இந்தநிலையில்தான் உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கானது தேதி அறிவிக்காமல் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும் ஜல்லிக்கட்டு போட்டிகள் 2017 ஆண்டு தெரிவித்த அதே சட்டத்தின் படி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது.