நமது பால்வெளி மண்டலத்தில், சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள ஒரு இளம் நட்சத்திரத்தைச் சுற்றி, நீர் இருப்பதற்கான தெளிவான சான்றுகளை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த நீரானது உறை நிலையில் உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நீர் என்பது உயிரினங்கள் வாழத் தேவையான மிக முக்கியமான கூறு. எனவே, இந்த கண்டுபிடிப்பு, புதிய கிரகங்களில் உயிர்கள் வாழக்கூடிய சூழல் இருக்கலாம் என்ற நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இந்த ஆய்வு மூலம், பூமியில் நீர் எவ்வாறு உருவானது என்பதைப் பற்றிய புதிய தகவல்களையும் விஞ்ஞானிகள் பெற்றுள்ளனர். இது, எதிர்காலத்தில் வேறு கிரகங்களில் உயிரைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.