ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி மோதல் ஏற்பட்டுள்ளதால் ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தின. பின் சில நேரங்களுக்குள், பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதற்கு பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்குள்ளும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது, இதில் 2 ராணுவ வீரர்கள் காயம் அடைந்தனர். இதேபோல், ஸ்ரீநகரில் உள்ள ஜபர்வான் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. வேட்டை நடத்தும் போது, அவர்கள் மீண்டும் பாதுகாப்பு படையினருக்கு எதிராக துப்பாக்கி சூடு மேற்கொண்டனர்.