ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டமாக நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்திற்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மூன்று கட்டங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 18-ந்தேதி நடைபெறும், இதில் பிரதமர் மோடி பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தரும் வகையில், தோடா மாவட்டத்தில் பொதுக்கூட்டம் நடத்துவார். தோடா மாவட்டத்திற்கு பிரதமர் மோடி 1982-ம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறை வருகிறார். இது, பாஜக தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு புதிய உற்சாகத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரில், செப்டம்பர் 18, 25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.