நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உள்ள கிராமம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட்டில் வங்கி கணக்கு தொடங்கலாம். ஆதார் கார்டு தவிர்த்து மற்ற எந்த ஆவணங்களும் தேவையில்லை என ஜன் தன் யோஜனா திட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. அதன்படி 2015-ல் இருந்து வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் வங்கி சேவை கணக்கு, பணம் பரிமாற்றம், கடன் பெறுதல், டெபாசிட் செய்தல் என நிதி உள்ளடக்கத்தில் புரட்சியை ஏற்படுத்தியதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
2015-ல் 15,670 கோடி ரூபாயாக இருந்த டெபாசிட், 2023 ஆகஸ்டில் 2.03 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2015 மார்ச் மாதம் சராசரி டெபாசிட் 1065 ஆக இருந்த நிலையில், தற்போது 4063 ஆக அதிகரித்துள்ளது.