ஜப்பான் - முதல்முறையாக கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அனுமதி

April 24, 2023

ஜப்பான் நாட்டில் முதல் முறையாக, கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் எளிதாக கிடைக்கும் வண்ணம் மாற்றப்பட்டு, பல ஆண்டுகள் கழிந்த நிலையில், ஜப்பான் சுகாதார அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், ஜப்பானில் இன்றைய தினம் வரை, அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே கருக்கலைப்பு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இணைய வழி கருத்து கேட்பு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் இந்த கருத்து கேட்பு […]

ஜப்பான் நாட்டில் முதல் முறையாக, கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு உலக நாடுகளில் கருக்கலைப்பு மாத்திரைகள் எளிதாக கிடைக்கும் வண்ணம் மாற்றப்பட்டு, பல ஆண்டுகள் கழிந்த நிலையில், ஜப்பான் சுகாதார அமைச்சகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும், ஜப்பானில் இன்றைய தினம் வரை, அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே கருக்கலைப்பு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருக்கலைப்பு மாத்திரைகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக இணைய வழி கருத்து கேட்பு நடத்தப்பட்டது. ஜனவரி மாதம் இந்த கருத்து கேட்பு தொடங்கப்பட்டது. தற்போது, சுகாதாரத்துறை இறுதி முடிவை வெளியிட்டுள்ளது. ஜப்பானின் மருந்து துறை ஆணையம், பிரிட்டிஷ் பார்மசியூட்டிகல் லைன் ஃபார்மா என்ற நிறுவனம் தயாரித்த மீ பீகோ (MeFeego) என்ற கருத்தடை மாத்திரைக்கு அனுமதி வழங்கி உள்ளது. இந்த மாத்திரைகளை கருத்தரித்து 9 வாரங்களுக்குள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத்திரைகள், ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வு சோதனையில், 93% வெற்றியை பதிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu