ஜப்பான் ஏர்லைன்ஸ் வியாழக்கிழமை அதிகாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, விமானங்களுக்கான டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
ஜப்பான் ஏர்லைன்ஸ், வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சம்பவம் உள்ளூர் நேரப்படி 7.25 மணிக்கு நடந்தது என்று குறிப்பிட்டுள்ளது. இந்த தாக்குதலினால் 14 உள்நாட்டு விமானங்களின் சேவை தாமதம் அடைந்தது. மேலும் சில சர்வதேச விமானங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கோளாறை சரி செய்த பின்னர், வாடிக்கையாளர்களுக்கு தகவல் அளிக்கப்படும் என்று தெரிவித்தனர். சைபர் பிரச்சினைக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, விமான சேவைகளுக்கான டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிக்கெட் வாங்கிய பயணிகளின் முன்பதிவு செல்லுபடியாகும்.