நாசாவின் ஆர்டெமிஸ் 1 திட்டம், மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளதாக அனைவரும் பெருமைப்படும் நிலையில், அதன் மூலம் செலுத்தப்பட்ட ஜப்பான் செயற்கைக்கோள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது இந்த திட்டத்தின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால், நிலவுக்கு செலுத்தப்பட்ட ஓரியன் விண்கலம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது.
நாசாவின் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் மூலம், ஜப்பானின் OMOTENASHI மற்றும் EQUULEUS ஆகிய செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டன. ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் JAXA, நவம்பர் 16ஆம் தேதி, இரண்டு செயற்கை கோள்களும் நிறுவப்பட்டதாக அறிவித்தது. ஆனால், OMOTENASHI செயற்கைக்கோள் வெற்றிகரமாக செயல்படும் நிலையில், EQUULEUS செயற்கைக்கோள் உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அறிவித்துள்ளது. இந்த செயற்கைக்கோளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் JAXA தெரிவித்துள்ளது.