கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, ஜப்பான் நாடு எச் 3 ராக்கெட்டை விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது. இது எச் 3 ராக்கெட்டின் இரண்டாவது ஏவுதல் ஆகும். முதல் முறை, இந்த ராக்கெட் ஏவுதல் முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
ஜப்பானின் எச் 3 ராக்கெட் ஏவும் முயற்சி மோசமான வானிலை காரணமாக இரு தினங்கள் ஒத்திவைக்கப்பட்டது. பிறகு, பிப்ரவரி 16ஆம் தேதி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. ஏவுதலுக்கான கவுண்டவுன் தொடங்கப்பட்டு இரண்டரை மணி நேரத்தில் ராக்கெட் ஏவப்பட்டது. ராக்கெட்டின் முதல் முயற்சியில் சரியாக இக்னைட் நிகழவில்லை. இந்த முறை, ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்ட ஜாக்சா மற்றும் மிட்சுபிஷி நிறுவனங்கள், கோளாறுகளை சரி செய்து வெற்றிகரமாக ராக்கெட் ஏவுதலை நிகழ்த்தி உள்ளன. இந்த ராக்கெட், ஜப்பானின் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு துணை புரிய உள்ளது. மேலும், ஜப்பானின் எச் 2ஏ ராக்கெட்டை விட குறைந்த செலவில் இது விண்வெளி திட்டங்களை செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.