பும்ரா சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருதை வென்றுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 2024-ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருதை இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வென்றுள்ளார். கடந்த ஆண்டின் டெஸ்ட் போட்டிகளில் சிறந்த செயல்பாட்டை காட்டிய பும்ரா, இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த விருது பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகிறார். முன்பு,இந்த விருதைப் பெற்ற ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), அஸ்வின் (2016), மற்றும் விராட் கோலி (2017) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.
மேலும், பும்ரா 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.