ஜெட் ஏர்வேஸ் விமான போக்குவரத்து நிறுவனத்தின் 538.05 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. பண மோசடி நடவடிக்கையில் சிக்கியது தொடர்பாக, அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தோற்றுனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் மற்றும் மகன் நிவான் கோயல் ஆகியோர் மீது பண மோசடி புகார்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எனவே, அவர்களுக்கு சொந்தமான குடியிருப்பு, வணிக வளாகங்கள் மற்றும் இதர சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில், சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கி உள்ளதாக அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது. ஏற்கனவே, கடன் சுமையில் சிக்கி இருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.