ஜியோ நிறுவனம் அதன் 5ஜி சேவையை இந்தியாவில் அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.
ஜியோ நிறுவனம் அதன் 5ஜி இணைய சேவையை அடுத்த மாதம் தீபாவளி முதல் அறிமுகம் செய்யவுள்ளதாக அந்நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களான டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திற்கும், கிராமத்திற்கும் அதிவேக ஜியோ 5ஜி சேவை வரும் டிசம்பர் 2023 ஆம் ஆண்டிற்குள் வழங்கப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்த 5ஜி சேவை உலகின் மிகப்பெரிய மற்றும் மேம்பட்ட 5ஜி சேவையாக இருக்கும். இதனை அந்த நிறுவனம் ‘Stand Alone 5G’ என்று அழைக்கிறது. இதில் 4G சேவையை எப்போதும் அது பயன்படுத்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.