ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இதை முதலீட்டு நிறுவனமாக, கோர் இன்வெஸ்ட்மென்ட் கம்பெனி என்ற வகையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி தற்போது இந்த மாற்றத்திற்கான அனுமதியை வழங்கியுள்ளது. பங்குச்சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளது.
கடந்த 2023 ஆகஸ்ட் 23ஆம் தேதி, முதல் முறையாக ஜியோ பைனான்ஸ் தனி நிறுவனமாக வெளியானது. அதன் பிறகு, கடந்த 2023 நவம்பர் மாதத்தில் வங்கி அல்லாத நிதி நிறுவனம் என்ற நிலையில் இருந்து முதலீட்டு நிறுவனமாக மாற்றம் செய்வதற்கு ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் விண்ணப்பித்தது. பல்வேறு பரிசீலனைகளுக்கு பிறகு, மத்திய ரிசர்வ் வங்கி இதற்கான ஒப்புதலை தற்போது வழங்கியுள்ளது.