ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், முதல் முறையாக 2 லட்சம் கோடி சந்தை மதிப்பை தாண்டி உள்ளது. இந்திய அளவில் மொத்தம் 39 நிறுவனங்கள் மட்டுமே 2 லட்சம் கோடி இலக்கை தாண்டி உள்ளன.
நிகழாண்டு தொடக்கம் முதலே, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் ஏற்றம் பெற்று வந்தன. கிட்டத்தட்ட 35% உயர்வு பதிவாகி உள்ளது. இந்த நிலையில், இன்று, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தின் பங்குகள் வரலாற்று உச்சத்தை பதிவு செய்து, 2 லட்சம் கோடி சந்தை மதிப்பு இலக்கையும் தாண்டி உள்ளது. இன்றைய தினம், கிட்டதட்ட 8% வரை ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் உயர்ந்தன. இன்றைய வர்த்தக நாளின் போது, நிறுவனத்தின் ஒரு பங்கு 326 ரூபாய்க்கு வர்த்தகமானது.