ஆந்திர பிரதேச மாநிலத்தில் 6500 கோடி ரூபாய் முதலீட்டில் 5ஜி இணைய சேவையை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக, திருமலை, விசாகப்பட்டினம், விஜயவாடா மற்றும் குண்டூர் பகுதிகளில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 26ம் தேதி முதல், ஜியோ நிறுவனத்தின் 5ஜி அறிமுகச் சலுகையை ஆந்திர பிரதேச மக்கள் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5ஜி இணைய சேவை தொடங்கப்பட்ட விழாவில் ஆந்திர பிரதேசத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் குடிவாடா அமர்நாத், தலைமைச் செயலர் ஜவகர் ரெட்டி ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அமைச்சர் அமர்நாத், "ஏற்கனவே, ஜியோ நிறுவனம், நம் மாநிலத்தில் 26000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. மேலும், 6500 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம், அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், ஆத்திரப்பிரதேசத்தின் அனைத்து குக்கிராமங்களிலும் 5ஜி இணைய சேவை கொண்டு சேர்க்கப்படும்" என்று கூறினார்.