ரிலையன்ஸ் நிறுவனம், மிகக் குறைந்த விலையில் லேப்டாப் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தது. ஒரு வருடத்திற்கு முன் இதற்கான அறிவிப்பு வெளியானது. தற்போது, இந்த குறைந்த விலை லேப்டாப்புக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
ஜியோ நிறுவனத்தின் சொந்த இயங்கு தளத்தில் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஜியோ சிம்கார்டு பொருத்தப்பட்டுள்ளது. அதன் மூலம், இணைய சேவை வழங்கப்படுகிறது. இது, ஜியோ புக் 4ஜி என பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை 16,499 என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5ம் தேதி முதல் இது சந்தையில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இணையதளம் மற்றும் விற்பனையகங்களில் இந்த லேப்டாப் விற்பனை செய்யப்படும். மேலும், அமேசான் இணைய வர்த்தக தளத்திலும் லேப்டாப் விற்பனை மேற்கொள்ளப்படும். இந்த லேப்டாப்பை முன்பதிவு செய்வதற்கு https://www.jiobook.com என்ற தளத்தை அணுகவேண்டும்.