ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இந்திய பிரிவு, தனது வரலாற்றில் மிகச் சிறப்பான காலாண்டு விற்பனையை பதிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் விற்பனை 102% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவில் மொத்தம் 1048 வாகனங்கள் இந்த காலகட்டத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சி அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரேஞ்ச் ரோவர் விற்பனை 209% உயர்வை பதிவு செய்துள்ளது. குறிப்பாக, ரேஞ்ச் ரோவர், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் மற்றும் டிபன்டர் ஆகியவை 78% விற்பனை செய்யப்பட்டுள்ளன. மேலும், வாகனங்களுக்கான முன்பதிவு 88% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜி எல் ஆர் நிறுவனத்தின் இந்திய பிரிவு நிர்வாக இயக்குனர் ராஜன் அம்பா, இந்தியாவில் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் வர்த்தகம் 137% உயர்ந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தொடர்ந்து, அதிக வளர்ச்சியை எதிர்நோக்குவதாக கூறியுள்ளார்.