உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஜோ பிடன் கண்டனம்

October 11, 2022

உக்ரேனிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியது. அதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் " ரஷ்ய அதிபர் புடினின் சட்டவிரோதப் போரின் இந்த தாக்குதல்கள் மிருகத்தனத்தை வெளிப்படுத்துகின்றன" என்று கூறினார். இது குறித்து பிடன் தனது அறிக்கையில் ௯றியதாவது, 'உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இத்தாக்குதலில் இராணுவ நோக்கமின்றி, பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். உக்ரேனிய மக்கள் மீதான புடினின் சட்டவிரோதப் […]

உக்ரேனிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தியது. அதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் " ரஷ்ய அதிபர் புடினின் சட்டவிரோதப் போரின் இந்த தாக்குதல்கள் மிருகத்தனத்தை வெளிப்படுத்துகின்றன" என்று கூறினார்.

இது குறித்து பிடன் தனது அறிக்கையில் ௯றியதாவது, 'உக்ரைன் முழுவதும் ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இத்தாக்குதலில் இராணுவ நோக்கமின்றி, பல பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். உக்ரேனிய மக்கள் மீதான புடினின் சட்டவிரோதப் போரின் கொடூரத்தை அவை வெளிப்படுத்துகின்றன. இ௫ப்பினும் இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் உக்ரைன் மக்களுக்கு துணை நிற்க வேண்டும் என்ற அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இணைந்து உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யாவின் மீது பொ௫ளாதார சுமைகளை சுமத்தும். அதுமட்டுமின்றி உக்ரேனியப் படைகள் அவர்களது நாட்டையும் அவர்களின் சுதந்திரத்தையும் பாதுகாக்க தேவையான ஆதரவை அமெரிக்கா வழங்கும்'. இவ்வாறு பிடன் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu