அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை இஸ்ரேல் பயணம்

October 17, 2023

நாளை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு தனது இரண்டு போர்க்கப்பல்களை மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. அவ்வப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அமெரிக்கா அதிபர் இஸ்ரேலுக்கு செல்லக்கூடும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நாளை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு […]

நாளை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் போர் தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு தனது இரண்டு போர்க்கப்பல்களை மத்திய தரைகடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. அவ்வப்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அமெரிக்கா அதிபர் இஸ்ரேலுக்கு செல்லக்கூடும் என்று தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில் நாளை அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ளப்போவதாக அமெரிக்க வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரியின் பியர் கூறுகையில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு நாளை செல்ல உள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. பின்னர் ஜோ பைடன் அங்கிருந்து ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு செல்கிறார்.அங்கு அவர் ஜோர்டான் மன்னர், எகிப்த அதிபர் மற்றும் பாலஸ்தீன மேற்கு கரை அதிபர் ஆகியோரை சந்திக்க உள்ளார். அப்போது அவர் பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக ஹமாஸ் அமைப்பு நிற்கவில்லை என்று வலியுறுத்துவார். அதோடு காசாவில் உள்ள பொதுமக்களின் அடிப்படை, மனிதாபிமான தேவைகள் குறித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்பட்டுள்ளது.முன்னதாக காசாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்வது மிகப்பெரிய தவறு என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu