புற்றுநோய் ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் $15 மில்லியன் செலுத்தும் ஜான்சன் அண்ட் ஜான்சன்

October 16, 2024

பல தசாப்தங்களாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதால் மீசோதெலியோமா என்ற புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி இவான் ப்ளாட்கின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கனெக்டிகட் நடுவர் மன்றம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.15 மில்லியன் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கூடுதல் தண்டனை தொகையை வழங்க வேண்டும் எனவும் நடுவர் மன்றம் பரிந்துரைத்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் டால்க் பவுடர் விற்பனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் […]

பல தசாப்தங்களாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் டால்க் பவுடரைப் பயன்படுத்தியதால் மீசோதெலியோமா என்ற புற்றுநோய் ஏற்பட்டதாகக் கூறி இவான் ப்ளாட்கின் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், கனெக்டிகட் நடுவர் மன்றம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திற்கு ரூ.15 மில்லியன் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், கூடுதல் தண்டனை தொகையை வழங்க வேண்டும் எனவும் நடுவர் மன்றம் பரிந்துரைத்துள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் டால்க் பவுடர் விற்பனையை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் நிறுத்திவிட்டது. மேலும், தங்களது தயாரிப்புகள் புற்றுநோய் ஏற்படுத்துவதாக தொடரப்பட்ட பல வழக்குகளுக்கு எதிராக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் வாதிட்டு வருகிறது. தற்போது, கனெக்டிகட் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அத்துடன், இதே போன்ற 62,000-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தீர்ப்பதற்காக, ரூ.9 பில்லியன் தொகையை இழப்பீடாக வழங்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu