ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான கூட்டு குடிநீர் திட்டப்பணி விரைவில் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ரூ.10 ஆயிரத்து 97 கோடி மதிப்பில் நாகப்பட்டினம், மதுரை, திருவாரூர், ராமநாதபுரம், திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 3 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்ட ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாகப்பட்டினம், மதுரை அலங்காநல்லூர், திருவாரூர், ராமநாதபுரம்-திண்டுக்கல், விருதுநகர், தூத்துக்குடி, நாமக்கல் மாவட்டம், நெல்லை மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. விரைவில் தொடங்கும் இந்த பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு பரிசீலனையில் உள்ளது. சில பணிகளுக்கு விரைவில் பணி ஆணை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டப்பணிகள் அனைத்தும் உரிய விதிகளின்படி விரைவில் தொடங்கி நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.