இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கு தகுதியானவர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே நாட்டை சேர்ந்த எழுத்தாளரான ஜான் பாஸ் என்பவருக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று ஸ்வீடன் நாட்டு அகாடமி அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அகாடமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னுடைய புதுமையான நாவல்கள், நாடகங்கள், கட்டுரைகள், கதைகள், மற்றும் குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாயிலாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக நார்வே நாட்டின் இலக்கியத்தில் ஜான் சாதனை புரிந்துள்ளார். அவருடைய படைப்புகளுக்காக அவரை கௌரவிக்கும் வகையில் இந்த பரிசினை வழங்க உள்ளோம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பரிசை பெறுவது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் ஜான் பாஸ்.