ஜாகுவார் -ன் காலாண்டு விற்பனை பின்தங்கியதால் ஜேபி மோர்கன் டாடா மோட்டார்ஸின் பங்குகளை குறைத்தது

October 11, 2022

உலகளாவிய இடைத்தரகு நிறுவனமான ஜேபி மோர்கன் ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) வணிகத்திற்கான விற்பனை எதிர்பார்த்ததை விட குறைந்ததால் டாடா மோட்டார்ஸின் பங்குகளை குறைத்துள்ளது. அதாவது டாடவின் பங்குகளை பழைய விலையிலி௫ந்து ‘நியூட்ரல்’ என்று குறைத்து அதன் இலக்கு விலையை ரூ.525ல் இருந்து ரூ.455 ஆக குறைத்தது. ஆகஸ்டில், நிறுவனம் மொத்த விற்பனை அளவுகள் 90,000 ஆக இருக்கும் என்று கணித்தி௫ந்தது. இந்நிலையில் 30 செப்டம்பர் 2022 அன்று முடிவடைந்த காலாண்டில் JLR க்கான மொத்த விற்பனை […]

உலகளாவிய இடைத்தரகு நிறுவனமான ஜேபி மோர்கன் ஜாகுவார் லேண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) வணிகத்திற்கான விற்பனை எதிர்பார்த்ததை விட குறைந்ததால் டாடா மோட்டார்ஸின் பங்குகளை குறைத்துள்ளது.

அதாவது டாடவின் பங்குகளை பழைய விலையிலி௫ந்து ‘நியூட்ரல்’ என்று குறைத்து அதன் இலக்கு விலையை ரூ.525ல் இருந்து ரூ.455 ஆக குறைத்தது. ஆகஸ்டில், நிறுவனம் மொத்த விற்பனை அளவுகள் 90,000 ஆக இருக்கும் என்று கணித்தி௫ந்தது. இந்நிலையில் 30 செப்டம்பர் 2022 அன்று முடிவடைந்த காலாண்டில் JLR க்கான மொத்த விற்பனை அளவுகள் 75,307 ஆக இருந்தது. சப்ளையர் சிப்களை எதிர்பார்த்ததை விட குறைந்த எண்ணிக்கையில் வழங்கியதால் உற்பத்தி குறைந்ததாக டாடா நிறுவனம் குற்றம் சாட்டியது. இருப்பினும், குறைக்கடத்தி சப்ளையர்களுடனான புதிய ஒப்பந்தங்கள் 2023ம் நிதியாண்டின் இன் H2 இல் விற்பனையை அதிகரிக்கும் என்றும் கூறியது. இது குறித்து ஜேபி மோர்கன், ஒரு குறிப்பில், பங்குகளை ஆக்கப்பூர்வமாக மாற்ற JLR இல் உற்பத்தி பிரிவில் சிறப்பாக திட்டமிடப்பட வேண்டும என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu