ஜேபி மார்கன் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி பிரபுதேவ் சிங் தனது பதவியில் இருந்து விலகி உள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜே பி மார்கன் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை பொறுப்பில் பிரபுதேவ் சிங் நியமிக்கப்பட்டார். அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர் தலைமை பொறுப்பில் இருப்பார் என சொல்லப்பட்டது. அவரது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே அவர் பதவி விலகி உள்ளார். இந்த நிலையில், ஜே பி மார்கனின் இந்தியாவுக்கான வர்த்தக வங்கி பிரிவு தலைவர் பிரணவ் சாவதா, அவரது பொறுப்பை ஏற்று நடத்துவார் என தகவல் வெளிவந்துள்ளது.