விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் தோற்றுனர் ஜூலியன் அசாஞ்சே இங்கிலாந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ராணுவ ரகசியங்களை வெளியிட்டதாக அவர் ஒப்புக் கொள்ள முன் வந்ததை அடுத்து, அவர் விடுவிக்கப்பட்டார்.
நேற்று இரவு இங்கிலாந்து நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், இந்த வார இறுதியில் அமெரிக்க நீதிமன்றத்தில் அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளிப்படுத்தியதாக அசாஞ்சே ஒப்புக் கொள்ள உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர் தொடர்பான அமெரிக்க ராணுவ ரகசியங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது. அதன் பிறகு, ஈக்வடாரில் தஞ்சமடைந்த அசாஞ்சே, கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2022 ஜூன் மாதத்தில் அவரை அமெரிக்காவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. மேலும், அவ்வாறு அசாஞ்சேவை நாடு கடத்தும் பட்சத்தில், அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட கூடாது என்ற நிபந்தனை விதித்துள்ளது. இந்த சூழலில், குற்றங்களை ஒப்புக்கொள்வதாக அசாஞ்சே கூறியுள்ளார்.