கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தலைமைக்கு எதிராகவும், அவர் பதவி விலக வேண்டும் எனவும் கோரி, லிபரல் கட்சி எம்பிக்கள் வாக்களித்துள்ளனர். கனடா பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் லிபரல் கட்சியின் 153 எம்.பிக்களில் 24 பேர் ட்ரூடோ பதவி விலக வேண்டும் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் அக்டோபர் 28 ஆம் தேதிக்குள் ட்ரூடோ தனது எதிர்காலம் குறித்து முடிவு செய்ய வேண்டும் என எம்.பிக்கள் அவகாசம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் பதவி விலக தவறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
அண்மையில் நடந்த இரண்டு முக்கிய தேர்தல்களில் பாதுகாக்கப்பட்ட தொகுதிகளை லிபரல் கட்சி இழந்தது மற்றும் மக்கள் மத்தியில் ஆதரவு தொடர்ந்து குறைந்து வருவது போன்ற காரணங்களால் இது நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, 2025 அக்டோபருக்குள் நடக்கவுள்ள அடுத்த கூட்டாட்சித் தேர்தலில் ட்ரூடோவின் தலைமையின் கீழ் கட்சி பெரிய இழப்பை சந்திக்கலாம் என எம்.பிக்கள் அஞ்சுகின்றனர். மேலும், தற்போதைய கருத்துக்கணிப்புகளும் கன்சர்வேடிவ் கட்சிக்கு சாதகமாக உள்ளது.