கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் ஆலயத்தில் இரண்டு நாட்கள் திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கும் திருவிழா, பிப்ரவரி 24ஆம் தேதி அன்று சிறப்பு திருப்பலி மற்றும் கொடி இறக்கம் நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா, இலங்கை பக்தர்கள் 8000 பேருக்கு யாழ்ப்பாணம் மாவட்ட அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி இந்தியாவில் இருந்து 4009 பக்தர்கள் கச்சத்தீவு செல்ல அனுமதிக்கப்பட உள்ளனர். இதில் பங்கேற்க விரும்புவோர் பிப்ரவரி 6ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் தடை செய்யப்பட்ட எவ்வித பொருட்களையும் படகில் கொண்டு செல்லக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.