கர்நாடகாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் உள்ள சி மற்றும் டி கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அமைச்சரவை, கன்னடர்களுக்கு கட்டாய வேலைவாய்ப்பு வழங்குவதற்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் சி மற்றும் பி கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்கள் மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள மக்கள் தங்களது வாழ்க்கையை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் கன்னட நிலத்தில் வேலை வாய்ப்பு இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு, கன்னடர்களின் நலனையும் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை என்று கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த மசோதாவானது நாளை கர்நாடகா சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.