தமிழகத்திற்கு 8000 கன அடி நீர் திறந்து விட முடிவு- கர்நாடக முதல்வர் சித்தராமையா

தமிழகத்திற்கு தினமும் 8000 கன அடி காவிரி நீர் திறக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்திராமையா தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த பதினோராம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31ம் தேதிக்குள் திறந்து விட வேண்டும் எனவும், தினமும் 11,500 கன அடி நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது. அதனை அடுத்து தமிழகத்திற்கு […]

தமிழகத்திற்கு தினமும் 8000 கன அடி காவிரி நீர் திறக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக முதல்வர் சித்திராமையா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த பதினோராம் தேதி காவிரி ஒழுங்காற்று குழு நடைபெற்றது. இதில் தமிழகத்திற்கு கர்நாடக அரசு 1 டிஎம்சி காவிரி நீரை ஜூலை 31ம் தேதிக்குள் திறந்து விட வேண்டும் எனவும், தினமும் 11,500 கன அடி நீர் பிலிகுண்டுலு சோதனை நிலையத்தில் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பரிந்துரை செய்தது. அதனை அடுத்து தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் தெரிவித்திருந்தார். மேலும் காவிரி ஒழுங்காற்று குழுவின் முடிவு எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சித்தராமையா தலைமையில் மாநில அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது. அதில் ஒழுங்காற்று குழு பரிந்துரையின்படி தமிழகத்திற்கு ஒரு டிஎம்சி தண்ணீர் திறந்து விடுவதற்கு பதிலாக தினமும் 8000 கன அடி நீர் திறக்க உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu