கர்நாடக தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து, முதல்வராக யாரை நியமிப்பது என்ற சிக்கல் எழுந்தது. சித்தராமையா மற்றும் சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது, கர்நாடகத்தின் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக சிவகுமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வரும் மே 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை மதியம் 12.30 மணி அளவில், பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள், ஒருமித்த கருத்து அடிப்படையில் இந்த தலைவர்கள் தேர்வு நடைபெற்றதாக கூறியுள்ளனர். அத்துடன், 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் வரையில், காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக சிவக்குமார் நீடிப்பார் என கூறியுள்ளனர்.