கர்நாடக சட்டசபை தேர்தலில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் வீட்டில் இருந்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சிகள் தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் பெங்களூரில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜீவ் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில், கர்நாடக சட்டசபைக்கான பதவி காலம் நடப்பு ஆண்டின் மே 24-ந்தேதி வரை உள்ளது. எனவே நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் கர்நாடகாவில் முதன்முறையாக 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அவர்கள் விரும்பினால் அறிவிப்பு வெளியான 5 நாட்களில் 12டி என்ற படிவம் கிடைக்க பெறும். அதனை பூர்த்தி செய்து 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் அனைவரும் வீட்டில் இருந்து வாக்களிக்க முடியும் என கூறியுள்ளார்.














