காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை படி திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக திறக்கவில்லை.
தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை இல்லாததால் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விடவில்லை. காவிரி மேலாண்மை தமிழகத்திற்கு 12ஆம் தேதி வரை வினாடிக்கு 5000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகவிற்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி கடந்த மாதம் காவிரி அணைகளில் இருந்து 4000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு நீர் மட்டம் குறைந்ததால் எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறப்பை கர்நாடக அரசு நிறுத்தி உள்ளது. தமிழகத்திற்கு தண்ணீர் விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து உள்ளது. இந்த வழக்கு வருகின்ற 21 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதன் மூலம் குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட தமிழக அரசு வலியுறுத்தும் என எதிர்பார்க்க படுகிறது.