சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வருகிற 26 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆட்சி பணிகளை போற்றும் வகையிலும், அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறையினர் அறியும் வகையிலும் நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு 2. 21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி ரூபாய் செலவில் தமிழக அரசு சார்பில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் கலை, இலக்கியம், அரசியலாக்க துறைகளில் சாதனைப்படுத்துவதை நினைவு கூறும் விதமாக நினைவிடத்தின் முகப்பில் மூன்று வளைவுகள் அமைக்கப்பட்டு இதன் பணிகள் தற்போது முடிவடைந்து உள்ளது. தற்போது பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கருணாநிதி நினைவிடத்தை மு. க ஸ்டாலின் வருகிற 26 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.