காஷ்மீரி பண்டிட்கள் வழக்கின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீரைச் சேர்ந்த பண்டிட் சமூகத்தினர் 1989 - 90 மற்றும் 1997 -98 காலகட்டத்தில் படுகொலை செய்யப்பட்டனர். உயிருக்கு பயந்து அவர்கள் காஷ்மீரை விட்டு வெளியேறினர். இது தொடர்பாக, சி.பி.ஐ., அல்லது என்.ஐ.ஏ., மீண்டும் விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி காஷ்மீரி பண்டிட்கள் அமைப்பு 2017ல் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
மேலும், 2017 உத்தரவுக்கு எதிராக அதே அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அதில், 2017 மனுவை மறுபரிசீலனை செய்யுமாறு மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.