கென்யாவின் முதல் செயற்கைக்கோள் - ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டில் செலுத்தப்பட்டது

April 15, 2023

ஆப்பிரிக்க நாடான கென்யா, தனது முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இன்று இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது. கென்யாவின் இந்த செயற்கைக்கோள், 9 கென்ய நாட்டு பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்களை சேகரிக்கும் எனவும், பஞ்சம், வெள்ளம், காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் குறித்து திட்டமிடுவதற்கு உதவும் எனவும், சொல்லப்பட்டுள்ளது. பால்கன் 9 ராக்கெட் மூலம், கென்யாவின் Taifa 1 செயற்கைக்கோள் விண்ணில் […]

ஆப்பிரிக்க நாடான கென்யா, தனது முதல் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இன்று இந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது.

கென்யாவின் இந்த செயற்கைக்கோள், 9 கென்ய நாட்டு பொறியாளர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த தகவல்களை சேகரிக்கும் எனவும், பஞ்சம், வெள்ளம், காட்டுத்தீ போன்ற பேரிடர்கள் குறித்து திட்டமிடுவதற்கு உதவும் எனவும், சொல்லப்பட்டுள்ளது.

பால்கன் 9 ராக்கெட் மூலம், கென்யாவின் Taifa 1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இது மோசமான வானிலை காரணமாக, 3 முறை தள்ளிப் போடப்பட்டு, இன்று செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராக்கெட் ஏவப்பட்டு, ஒரு மணி நேரம் 4 நிமிடங்கள் கழித்து, செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu