நிதி மசோதாவுக்கு எதிர்ப்பு - கென்யா பாராளுமன்றத்திற்கு தீ வைப்பு

June 26, 2024

கென்யா நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக கென்யாவில் இந்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க கூடாது என்று கூறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அவர்களை தடுக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இவர்கள் நாடாளுமன்றத்தின் ஒரு […]

கென்யா நாடாளுமன்றத்தில் நிதி மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் வரி உயர்த்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில தினங்களாக கென்யாவில் இந்த மசோதாவை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்க கூடாது என்று கூறி போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தனர். அப்போது அவர்களை தடுக்க போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தினர். இவர்கள் நாடாளுமன்றத்தின் ஒரு பகுதிக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. உடனே நாடாளுமன்றத்திற்குள் இருந்த உறுப்பினர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்த போராட்டத்தில் உயிரிழப்பு நடந்தது குறித்து தகவல் எதுவும் இல்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu