கென்ய நாட்டு அதிபர் வில்லியம் ரூட்டோ அமைச்சரவையை கலைத்தார்.
விரைவில் புதிய திறமையான அமைச்சரவையை அமைக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார். கடந்த 2022 ல் வில்லியம் ருட்டோ ஆட்சியைப் பிடித்தார். கென்யாவில் அதிகரித்து வரும் விலைவாசியை குறைப்பதாக அப்போது அவர் வாக்குறுதி அளித்து இருந்தார். அதோடு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் சில சீர்திருத்தங்களை அறிவித்தார். அதன் ஒரு பகுதியாகதான் கூடுதல் வரி விதித்து அவர் மசோதா தாக்கல் செய்தார். அதற்கு நாடு முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. போராட்டம் வெடித்தது. கென்யாவில் புதிய வரி சட்டங்களை எதிர்த்து கடந்த பல வாரங்களாக தீவிர போராட்டங்கள் நடைபெற்றது. இதில் 30 பேர் பலியாகினர். இறுதியில் அந்த மசோதாவை திரும்ப பெற்றார் ரூட்டோ.