கேரளாவில் 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.
கேரளா மாநிலம் மக்களவை தேர்தலில் 20 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 26-ந்தேதி நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது, பா.ஜ.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் தலா ஒரு தொகுதியில் வெற்றி கண்டுள்ளன.இந்நிலையில் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட ராகுல்காந்தி, ரேபரேலியில் வெற்றி பெற்ற பிறகு, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து, வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கு காலியாகின. இதேபோல், செலகரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியாகின. இந்த தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் கடந்த 13, 20 தேதிகளில் நடந்தன.தற்போது, இந்த 3 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.