வேந்தர் பதவியில் இருந்து கவர்னரை நீக்கும் மசோதா கேரள பேரவையில் நிறைவேற்றம்

December 14, 2022

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் மசோதா, நேற்று கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது. கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீபகாலமாக கடும் மோதல் நிலவி வருகிறது. இதையடுத்து, பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்க, கேரள அரசு கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், அந்த சட்டத்திற்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் மசோதாவை சட்டசபையில் கொண்டு வர கேரள அரசு முடிவெடுத்தது. […]

பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் மசோதா, நேற்று கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

கேரள அரசுக்கும், கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே சமீபகாலமாக கடும் மோதல் நிலவி வருகிறது. இதையடுத்து, பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்க, கேரள அரசு கடந்த மாதம் அவசர சட்டம் கொண்டு வந்தது. ஆனால், அந்த சட்டத்திற்கு கவர்னர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து, வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் மசோதாவை சட்டசபையில் கொண்டு வர கேரள அரசு முடிவெடுத்தது.

இந்த மசோதா நேற்று கேரள சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. சட்டத்துறை அமைச்சர் ராஜிவ், மசோதாவை தாக்கல் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதன்பின்னர், ஆளுங்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu