கேரள மாநிலத்தில் மது போதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
கேரள மாநில போக்குவரத்து துறை அமைச்சர் மது போதையில் யாராவது பணிக்கு வந்தால் அவர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் பேரில் கடந்த 1ம் தேதி முதல் 15ஆம் தேதி வரை பல்வேறு ஊழியர்களிடம் போக்குவரத்து துறை சோதனை நடத்தியது. அதில் மதுபானம் அருந்தியவர்கள், மதுபானம் வைத்திருந்தவர்கள் ஆகியவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி 74 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 26 தற்காலிக ஊழியர்கள் சஸ்பெண்ட் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை கேரள போக்குவரத்து துறையில் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் தற்போது மேலும் 97 ஊழியர்கள் மற்றும் 40 தற்காலிக ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.