இன்று அறிவிக்கப்பட்ட மத்திய இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள்:
ஐந்து ஆண்டுகளில் 2 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்.
வீட்டில் சூரிய ஒளி தகடு அமைத்தால் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
ஊட்டச்சத்து குறைபாட்டை சீர் செய்ய புதிய செயலி கொண்டு வரப்படும்.
வருமான வரியில் எந்த மாற்றமும் இல்லை; தற்போது உள்ள நடைமுறை தொடரும். கார்ப்பரேட் வரி 22% ஆக குறைக்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு வழங்கப்படும் 50 ஆண்டுகளுக்கான வட்டி இல்லா கடன் உதவி மூலம், நிகழாண்டில் 1.3 லட்சம் கோடி வழங்கப்படும்.
ஆன்மீக சுற்றுலாவுக்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்படும்.
கூடுதல் மருத்துவக் கல்லூரிகள் அமைப்பது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்
புத்தாக்க நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி சார்ந்த நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
40,000 சாதாரண ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக தரம் உயர்த்தப்படும்.
லட்சத்தீவில் சுற்றுலாவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்.
25000 ரூபாய் வரையிலான வரி தொடர்பான பழைய வழக்குகள் ரத்து செய்யப்படும்.
தொழில் முனைவோருக்கு வட்டி இல்லா கடன் வழங்குவதற்காக ஒரு லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும்.
மெட்ரோ ரயில் சேவை விரிவாக்க பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விமான நிலையங்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்த்தப்படும்.