அமெரிக்காவில் இந்திய தூதரகத்தை காலிஸ்தான் பயங்கரவாதிகள் தீவைத்து எரித்துள்ளனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்தை காலிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் தீவைத்து எரித்துள்ளனர். தகவலறிந்து சான் பிரான்சிஸ்கோ தீயணைப்புப்படை வீரர்கள் சம்பவ இடத்திற்க விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகள் உள்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2-ந்தேதி நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.