ஈரான் மத தலைவர் அயதுல்லா கமேனி, ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு சட்டவிரோதமானது என்று தெரிவித்தார்.
ஈராக் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி, அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஈரானுக்கு சென்றார். அவர் தலைநகர் டெஹ்ரானில், ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து பேசினார். இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் மத்திய கிழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள், குறிப்பாக சிரியாவின் சூழ்நிலைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. அப்போது, அயதுல்லா கமேனி "ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு சட்டவிரோதமானது" என்று தெரிவித்தார். மேலும் அரபு நாடுகளின் ஒருங்கிணைந்த போராட்டத்தை அழைத்தார். பின்னர், ஈராக் பிரதமர் சூடானி காசா மற்றும் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை கண்டித்து, இரு நாடுகளுக்கும் ஆதரவு வழங்கும் தனது நாட்டின் கொள்கையை சுட்டிக்காட்டினார்.