வரும் அக்டோபர் மாதம் முதல், தனது கார் விலைகளை 2% வரை உயர்த்த உள்ளதாக கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செல்டோஸ், காரன்ஸ் மாடல் கார்களின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன. ஆனால், சோனட் மாடல் கார் விலை உயர்த்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.அக்டோபர் 1ம் தேதி முதல், புதிய விலைகள் அமலுக்கு வரும் என கியா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் ஹர்தீப் பீரார் தெரிவித்துள்ளார். மேலும், "கடந்த ஏப்ரல் மாதத்தில் கியா நிறுவனம் வாகன விலைகளை உயர்த்தியது. அதை தொடர்ந்து எந்த விலையேற்றமும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், மற்ற வாகன நிறுவனங்கள் விலைகளை உயர்த்தி உள்ளன. அந்த வகையில், பி எஸ் 6 தர மேம்பாடு மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு போன்றவை காரணமாக, புதிய விலை ஏற்றம் அறிவிக்கப்படுகிறது" என கூறியுள்ளார்.