இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பணிகளை ஒத்தி வைத்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளது. மன்னர் சார்லஸ்க்கு தற்போது வயது 75. கடந்த மாதம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் புற்றுநோய் பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவர் குணமடைந்து மக்கள் பணிகளை மேற்கொள்வார் என்று அரண்மனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.