இங்கிலாந்து மன்னர் 3ம் சார்லஸ், ராணியுடன் நேற்று ஜெர்மனிக்கு வருகை தந்துள்ளார். முன்னதாக, அவரது பயணத்தில் திட்டமிடப்பட்டிருந்த பிரான்ஸ் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில், பணி ஓய்வு வயதை அதிகரித்ததன் தொடர்பாக, மக்கள் போராட்டம் வலுத்து வருவதால், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, அவர் 3 நாள் பயணமாக ஜெர்மனி வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் அவர் வந்த பொழுது, அவருக்கு அரசு முறை மரியாதை அளிக்கப்பட்டது.
மன்னராகப் பொறுப்பேற்ற பிறகு, அவர் வெளிநாட்டிற்கு செல்வது இதுவே முதல் முறையாகும். ஜெர்மனி நாட்டின் அதிபர் பிராங்க் வால்டர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் மன்னரை வரவேற்றனர். மேலும், மன்னரின் வரவேற்பு நிகழ்வில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மன்னர் சார்லஸின் ஜெர்மனி பயணம் மூலம், இருநாட்டு உறவுகள் வலுவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.