பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் இந்தியாவுக்கு 8 நாள் அரசு முறைப் பயணமாக இன்று வருகை தருகிறார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு துறை வெளியிட்ட அறிக்கையில், 'பூடான் அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், அவரது குடும்பத்தினர், அந்நாட்டு அரசின் மூத்த அதிகாரிகள் நவ. 3 முதல் வரும் 10-ஆம் தேதி வரை 8 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளனர். இந்தப் பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடியை அரசர் சந்தித்து, இருதரப்பு உறவின் பல்வேறு அம்சங்கள் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.