இந்தியா வந்துள்ள கம்போடியா மன்னர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.
60 ஆண்டுகளுக்கு பின்னர் கம்போடியா மன்னர் நாரோடம் சிஹாமோனி 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தடைந்தார். மன்னருடன் அரண்மனை மந்திரி, செனட் துணைத்தலைவர், வெளியுறவுத்துறை மந்திரி உள்ளிட்ட உயர்மட்டக் குழுவும் வந்துள்ளது. அவருக்கு நேற்று காலை ஜனாதிபதி மாளிகையில் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் ராஜ்காட் சென்று மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி ஆகியோருடன் கம்போடிய மன்னர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா, கம்போடியா இடையிலான தூதரக உறவு 70 ஆண்டுகளை எட்டி இருப்பதால் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.